தமிழகத்தின் மிக தொன்மையான வேத இதிகாசங்களுக்கு முந்திய திருத்தலம் ஒன்று உண்டு அதுதான் திருப்புல்லாணி.கடலோர நகரமான இந்த ஊர் ராமநாதபுரத்தின் தென்கிழக்கே 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு ஆதிஜெகநாத பெருமாள் பத்மா சினி தாயார்எழுந்தருளுயுள்ளனர்.வைணவர்களின் 108 திவ்விய ஆலயங்களில் திருப்புல்லாணி தலைசிறந்த ஒன்று.
வேதகாலத்தில் வாழ்ந்த அயோத்தி மன்னர் தசரத சக்கரவர்த்திக்கு நீண்ட நெடுங்காலமாக பிள்ளை பேறு இல்லாமல் இருந்தது.இதனால் தசரத சக்கரவர்த்தி திருப்புல்லாணி வந்து யாகங்கள் பல நடத்தியதன் பலனாக ராமபிரான் உள்ளிட்ட அனைத்து மக்களும் பிறந்ததாக ஐதீகம்.
இலங்கை மன்னரான ராவணன் சீதபிரட்டியை இலங்கைக்கு கடத்தி சென்றதை தொடர்ந்து ராமபிரான் சீதாதேவியை மீட்பதற்காக திருப்புல்லாணிக்கு வந்தார்.ராமர் கடலில் அணை அமைத்து இலங்கை செல்ல திட்டமிட்டார்.அப்போது திருப்புல்லாணியில் ராமபிரான் தர்பைபுல் மீது அமர்ந்துநீண்ட நெடிய கடலை அளவிட்டார்.இதன் காரணமாகவே இந்த ஊருக்கு “தர்பாசயணம்" என்று ஒரு பெயர் ஆயிற்று .வானர சேனை உதவியுடன் கடலில் பாலம் அமைக்கப்பட்டது.அதுதான் இன்றளவும் சேது அணை ‘சேது பந்தனம்' என்று அழைக்கப்படுகிறது.
ராமபிரான் இலங்கை செல்வதற்கு முன்பு திருப்புல்லாணியில் எழுந்தருளியுள்ள ஆதிஜெகநாத பெருமாளிடம் ராவணனை கொல்ல வில் பெற்று சென்றதாக புராண வரலாறுகளில் கூறப்படுகிறது.இந்துகளின் புன்னியதலன்களுள் ஒன்றான இத்திருத்தலம் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமானது.
கோவிலின் தொலைபேசி:04567-254527

Post a Comment