பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் திருச்சியில் இருந்து 10 கி.மீ தூரத்தில் காவிரி கரையில் அமைந்து உள்ளது.இத்தலத்தின் மொத்த பரப்பளவு 156 ஏக்கர்.தென்கிழக்கு ஆசியாவில் மிக உயரமான கோபுரம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் தான்.உயரம்236 அடி. முன்பக்க அகலம் 166 அடி. பக்கவாட்டில் அகலம் 97 அடி.கோபுரத்தின் எடை 120000 டன்.13 நிலைகள் உள்ள ராஜகோபுரத்தின் உச்சியில் ௧௩ கலசங்கள் உள்ளன.ஒவ்வொரு கலசமும் 10.5 அடி உயரம் உடையது.5.5 அடி சுற்றளவும், 135 கிலோ எடையும் கொண்டது.இந்த ராஜகோபுரம் திருச்சி மலைக்கோட்டையை விட பெரியது.
இத்தலத்தில் மூலவர் ஸ்ரீரங்கநாதன் ,உற்சவர் நம்பெருமாள் ,தாயார் -ஸ்ரீரெங்க நாயகி கோயில்கொண்டுள்ளனர்.
இந்த தலத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.திருச்சி சென்ரல் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் ஸ்ரீரங்கம் செல்கிறது.
கோவில் போன் நம்பர்: 95431-2432246

Post a Comment