மதுரைக்கு பெருமை சேர்க்கும் இடங்களில் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளமும் ஒன்று.இக் குளம் வடக்கு தெற்காக 1000 அடி நீளமும்,கிழக்கு மேற்காக 950 அடி அகலமும் கொண்டது.மிகப்பெரிய இக்குளத்தை சுற்றி 4 அடி உயரதில் கருங்கல்லி சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
நாலு பக்கமும் 12 படித்துறைகள் உள்ளன.குலத்தின் மையத்தில் ஒரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.அதன் நிழல் தரையில் விழாது.வைகை ஆற்றில் இருந்து இதற்க்கு நீர் வருகிறது.(வைகை ஆற்றில் தண்ணிர் இருந்தால்தான் குளத்திலும் தண்ணிர்இருக்கும்.)

தைப்பூசத்தன்று த்ப்பத்திருவிலா நடக்கும் மதுரை மீனாட்சி ,சுந்தரேசுவரர் உலா வருவார்கள்.நடுவில் மைய மண்டபத்தை சுற்றி அழகிய மரங்களும் சாலைகளும் சூழ்ந்துள்ள கட்சியோ என்ன அழகு! குளத்தில் நீர் நிரம்பி இருக்கும் காலங்களில் படகு சவாரியும் உண்டு.

Post a Comment