‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காடு சேலத்தின் அருகில் உள்ளது.ஏற்காட்டில் படகு சவாரி செய்யும் அழகான ஏறி உண்டு.ஜென்ஸ்சீட் என்று அழைக்கப்படும் ஏற்காட்டின் உயரமான பகுதியில் இருந்து ஏற்காடு நகரையே பார்க்க முடியும்.மலை ஊற்று தண்ணீர் கிள்ளியூர் அருகில் 300 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்சியாக கொட்டுகிறது.லேடிஸ் சீட் என்ற பகுதியில் இருந்து ஏற்காடு மலை பாதையை பார்க்க முடியும்.அதில் எ=ஏறிவரும் வாகனங்களையும் அவை வளைந்து நெளிந்து வருவதையும் காணலாம்.மேட்டூர் அணையை ஏற்காட்டில் ‘பகாடா பாயிண்ட்’என்ற இடத்தில இருந்து நல்ல சூரிய வெளிச்சத்தில் தெளிவான வானமாக இருந்தால் காண முடியும்.
சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீ தூரம் சமவெளியிலும் 25 கி.மீ தூரம் மலை பாதையிலும் பயணம் செய்தால் 1 மணி நேரத்தில் குளுகுளு ஏற்காட்டை அடையலாம்.

Post a Comment